மத்திய பட்ஜெட்: மக்கள் கருத்து கூறலாம்

 


டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்.,1 அன்று பார்லி.,யில் 2020-21 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில்,

" மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும், இந்தியாவின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மக்கள் MyGov இணையதளம் மற்றும் ஆப்-ல் தங்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பட்ஜெட் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் பணியில் மத்திய நிதியமைச்சகமும் இறங்கி உள்ளது. குறிப்பாக விவசாயம் மற்றும் கல்வித்துறை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை கூறுங்கள் என மத்திய அரசு கேட்டுள்ளது.
கருத்துகளை தெரிவிக்க வேண்டிய இணைய முகவரி: https://www.mygov.in/group-issue/inviting-ideas-and-suggestions-union-budget-2020-2021/



 


ஆசிரியர் சேலம்பாரதிராஜா